ADB இலங்கையின் Ditwah பிந்தைய மீள்கட்டமைப்புக்கு $200 மில்லியன் அவசர உதவி

Cyclone Ditwah புயலுக்குப் பிந்தைய இலங்கையின் மீள்கட்டமைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக, Asian Development Bank (ADB) நிறுவனம் $200 மில்லியன் அவசர நிதி உதவியை அங்கீகரித்துள்ளது.

ADB வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த தொகுப்பு $100 மில்லியன் சாதாரண கடன், $100 மில்லியன் சலுகை கடன் மற்றும் திட்ட செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் $500,000 தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

“Post-Cyclone Ditwah Reconstruction and Livelihood Support Project” எனப்படும் இந்த திட்டம், சேதமடைந்த சாலைகள், பாசன அமைப்புகள் மற்றும் வீடுகளை மறுசீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படும்.

இந்த திட்டம் “build-back-better” கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால பேரிடர்களை சமாளிக்கக்கூடிய வகையில் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என ADB தெரிவித்துள்ளது.

Cyclone Ditwah, 2025 நவம்பர் 28 அன்று இலங்கையை தாக்கி, 22 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து, பாசன அமைப்புகள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்தது.

இந்த நிதி உதவியின் மூலம் தேசிய மற்றும் கிராமப்புற சாலைகள், பாசன அமைப்புகள், அணைகள் மற்றும் வீடுகள் மீண்டும் கட்டமைக்கப்படவுள்ளது. அதேவேளை விவசாயிகளுக்கு பயிர்ச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தேவையான ஆதரவுகளும் வழங்கப்படும்.

இந்த திட்டம் இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் எனவும் ADB தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore