கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR – இதோ புதிய அறிவிப்பு

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி நிலையான சூழலில், எரிபொருள் நுகர்வை ஏதேனும் ஒரு வழியில் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்குக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலைமை தொடர்வதன் காரணமாக, எரிபொருள் நுகர்வை பெருமளவில் குறைக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே QR முறைமை மற்றும் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்களவு குறைப்பை ஏற்படுத்த முடிந்த போதிலும், அது இன்னும் நாட்டின் தேவைக்கான மட்டத்திற்கு வரவில்லை.”

தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் இருந்த எரிபொருள் செலவினம், மே மாதமாகும்போது வெளிநாட்டு நாணயமாக 524 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையைத் தொடர்ந்து தாங்கிக்கொள்வது கடினம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு நாடாக நாம் சிந்தித்து எரிபொருள் நுகர்வில் நிச்சயமாக ஏதேனும் ஒரு குறைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நாட்டை விட்டு வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அது ஒருபுறம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, எதிர்காலத்தில் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனமும் (CPC), டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை மேலும் கடுமையான முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.

இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கத்தை ஓரளவிற்குச் சமன் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore