அமெரிக்காவின் United States Senate, குடிவரவு சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு (DHS) கூடுதலாக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 47 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். அனைத்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்ததுடன், ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினர் மட்டுமே எதிராக வாக்களித்துள்ளார்.
புதிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் U.S. Immigration and Customs Enforcement (ICE) மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதி வழங்கப்படவுள்ளது.
இந்த நிதி, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump முன்னெடுத்து வரும் சர்ச்சைக்குரிய சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதா தொடர்பான விவாதங்களின் போது, டிரம்பின் ஆதரவாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட 1.8 பில்லியன் டொலர் மதிப்பிலான “Anti-Weaponization Fund” குறித்தும் கடும் விவாதங்கள் இடம்பெற்றன.
மேலும், வெள்ளை மாளிகையில் புதிய ஆடம்பர மண்டபம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சில அரசியல் நியமனங்கள் தொடர்பாகவும் செனட் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
எனினும், மசோதா இன்னும் அமெரிக்க United States House of Representatives பிரதிநிதிகள் சபையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் அந்த வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பின்னர் மசோதா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.





