ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் : 31,000 பேருக்கு புதிய நியமனங்கள்.
கல்விமானி (B.Ed) பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளன. இதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 23,006 விண்ணப்பதாரர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
ஆட்சேர்ப்பு விபரம்:
- 15,000 ஆசிரியர்கள் – வரையறுக்கப்பட்ட பரீட்சை மூலம்
- எஞ்சியோர் – திறந்த போட்டிப் பரீட்சை மூலம்
இவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், டிசம்பர் மாதத்தில் சுமார் 6,500 டிப்ளோமாதாரர்களும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.Management assistant jobs
இதன்படி, இந்த ஆண்டில் மட்டும் 31,000 இற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையில் சுமார் 44,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
– கல்வி அமைச்சு –





