யால தேசிய சரணாலயத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் கைது

யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தி ‘சுது வெலிமுல்ல’ பகுதியில் பதிவாகியுள்ளது.

சஃபாரி பயணம் சென்ற இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், சரணாலயத்தின் விதிகளை மீறி ஜீப் வண்டிகளில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிடுகையில், யால சரணாலயத்திற்குள் ஜீப் சாரதியோ அல்லது வேறு நபரோ விதிகளை மீறினால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிகளுக்கு சஃபாரி சேவைத் தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகள் குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த ஜீப் வண்டிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore