நடிகையின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் தொழிலதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தத்தில் இருந்த தொழிலதிபர் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கன்னட சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் கிரிஷி தபண்டா. இவர் பெங்களூருவில் உள்ள ராஜேஸ்வரி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் தொழிலதிபர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக தங்கியிருக்கிறார். நேற்று கிரிஷி தபண்டா வெளியில் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் துர்நாற்றம் வீசியிருக்கிறது.

சம்பவத்தன்று நடிகை கிரிஷி தபண்டா வெளியில் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய போது, தொழிலதிபர் உயிரிழந்து சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வைசாக் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலதிபர் வைசாக் உயிரிழந்த வீட்டில் எந்தவித தற்கொலை கடிதமும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தனது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக வைசாக் சில நாட்கள் மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore