நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரல்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு அண்மையில் கூடியிருந்தது.

இதன்போது, குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டதுடன், இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை கூட்டத்தின் பின்னர், குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக நீதிச் சேவைச் சங்கமும் பொது சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் செயற்குழுவினால் எதிர்வரும் 11ஆம் திகதி இந்த விசேட பொது சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore