இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, தொடரை 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரொன்றை வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், தொடரின் முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் பெற்ற மாபெரும் வெற்றியே அவர்களின் இந்தத் தொடர் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 60 ஓவர்களில் 302 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இருப்பினும், வெற்றியை நோக்கிச் செல்வதில் ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாத மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜோன் கேம்ப்பெல் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோரின் ஆட்டமிழக்காத அரைச்சதங்களின் உதவியுடன் விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஜோன் கேம்ப்பெல் மற்றும் பிரண்டன் கிங் ஆகிய இருவருமே ஆட்டமிழக்காமல் தலா 51 ஓட்டங்களைப் பெற்றனர்.

போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 549 ஓட்டங்களைக் குவித்ததுடன், லஹிரு உதார 188 ஓட்டங்களைப் பெற்றார்.

அதற்குப் பதிலடியாக மேற்கிந்திய தீவுகள் அணி 499 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 112 ஓட்டங்களையும் பெற்று போட்டியின் போக்கை மேற்கிந்திய தீவுகள் அணியின் பக்கம் திருப்ப பங்களிப்பு செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் ஜஸ்டின் கிரீவ்ஸ் வென்றெடுத்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore