நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வேயை கூடுதல் நேர ஆட்டத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டியின் முதல் பாதியில் நோர்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.

தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்தாலும், முதல் பாதி முடிவதற்குள் ஜூட் பெல்லிங்ஹாம் இங்கிலாந்துக்காக சமன் செய்யும் கோலை அடித்தார்.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிர முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.நோர்வேயின் ஒரு கோல் ‘VAR’ தொழில்நுட்ப உதவியுடன் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

கூடுதல் நேரத்தில், நோர்வே கோல்கீப்பர் நைலேண்ட் தவறவிட்ட பந்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஜூட் பெல்லிங்ஹாம், வெற்றியைக் குறிக்கும் கோலை அடித்து இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore