ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

அதேநேரம் பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டதாகவும் ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore