தாய்லாந்து: சுமார் 250 நாட்கள் கடலில் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், ஓய்வுக்காக தாய்லாந்தின் பட்டாயா நகரை வந்தடைந்துள்ளனர்.
USS Abraham Lincoln விமானந்தாங்கி கப்பலில் பயணித்த சுமார் 5,000 கடற்படை வீரர்கள், நீண்டகால கடற்படைப் பணிக்குப் பின்னர் புதன்கிழமை பட்டாயாவில் கரையிறங்கினர்.
கரையிறங்கிய பெரும்பாலான வீரர்கள், முதலில் பட்டாயாவின் வணிக வளாகங்களுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் பட்டாயாவின் பிரபலமான Walking Street உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க வீரர்கள் காணப்பட்டனர். நீண்டகால கடற்படைப் பணிக்குப் பின்னர் கிடைத்த இந்த ஓய்வு, வீரர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தாய்லாந்தில் விபச்சாரம் சட்டவிரோதமானது என்பதால், பாலியல் தொழில் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை கண்காணிப்பதற்காக Shore Liaison Group (SLG) குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக மேற்கொண்ட பணியின் காரணமாக சில நேரங்களில் வீரர்களின் மன உறுதி பாதிக்கப்பட்டிருந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து பயணத்தை முடித்த பின்னர், USS Abraham Lincoln கப்பல் அமெரிக்காவின் கலிபோர்னியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





