16 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்கக் கூடாது என்ற புதிய சட்டத்தை மலேசியா இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, Facebook, Instagram, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தி, 16 வயதிற்குக் குறைவானவர்களுக்கு கணக்குகள் உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் மலேசிய ரிங்கிட் (சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை ஆபத்தான உள்ளடக்கங்கள், இணைய வழி துன்புறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் அம்சங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, Australia, Brazil, Indonesia உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடக பயன்பாட்டில் வயது வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன அல்லது அதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.
எனினும், இந்த புதிய சட்டம் தொடர்பில் தனியுரிமை மற்றும் நடைமுறை சவால்கள் குறித்தும் சில தரப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
⚠️ குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை நோக்கி நகரும் நிலையில், மலேசியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.





