‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு தனி நிதியம் இல்லை – COPF இல் தகவல்

‘Rebuilding Sri Lanka’ திட்டம் தற்போது திறைசேரி பிரதிச் செயலாளரின் கீழ் பராமரிக்கப்படும் வங்கி கணக்கின் ஊடாகவே செயல்பட்டு வருவதாக பொதுநிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவான COPF-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற COPF கூட்டத்தில், கணக்காய்வாளர் நாயகம் சமுதிக ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.

“Rebuilding Sri Lanka” என்ற பெயரில் எந்தவொரு சட்டபூர்வ நிதியமும் (Statutory Fund) தற்போது இல்லை என்றும், அந்த கணக்கின் ஊடாக இதுவரை எந்தவொரு கொடுப்பனவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் Harsha de Silva தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான Chathuranga Abeysinghe, Nishantha Jayaweera உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த செயற்திட்ட முன்னேற்றம் தொடர்பாகவும் கணக்காய்வாளர் நாயகமும் அதிகாரிகளும் குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore