அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) உத்தியோகபூர்வ 14 அம்ச ஆவணத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணம், ஹோர்முஸ் நீரிணை மீள்திறப்பு, ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தளர்த்தல் மற்றும் அணுசக்தி திட்டம் தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளை உள்ளடக்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
🔹 உடனடி போர் நிறுத்தம் அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அனைத்து முனைகளிலும், குறிப்பாக லெபனானிலும், உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
🔹 பரஸ்பர இறையாண்மைக்கு மரியாதை இரு நாடுகளும் ஒருவரின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர் தலையிடாதிருப்பதாக உறுதியளித்துள்ளன.
🔹 60 நாட்களில் இறுதி ஒப்பந்தம் இறுதி சமாதான ஒப்பந்தத்தை அதிகபட்சம் 60 நாட்களுக்குள் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
🔹 ஹோர்முஸ் நீரிணை திறப்பு அமெரிக்கா தனது கடற்படைத் தடையை அகற்றும்; ஈரான் வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.
🔹 ஈரான் மறுசீரமைப்பிற்கு 300 பில்லியன் டொலர் திட்டம் ஈரானின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பிற்காக அமெரிக்கா மற்றும் பிராந்திய கூட்டாளிகள் இணைந்து குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
🔹 பொருளாதாரத் தடைகள் நீக்கம் ஈரானுக்கு எதிரான ஐ.நா., IAEA மற்றும் அமெரிக்காவின் அனைத்து முக்கிய தடைகளும் படிப்படியாக நீக்கப்படும்.
🔹 அணு ஆயுதம் உருவாக்கமாட்டோம் என ஈரான் உறுதி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ பெறவோ மாட்டாது என மீண்டும் உறுதியளித்துள்ளது.
🔹 புதிய தடைகள் இல்லை இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காது; ஈரானும் தனது அணுத் திட்டத்தில் தற்போதைய நிலையைத் தொடரும்.
🔹 ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா உடனடி அனுமதிகளை வழங்கும்.
🔹 முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிப்பு ஈரானின் முடக்கப்பட்ட நிதி மற்றும் சொத்துக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கும்.
🔹 கண்காணிப்பு அமைப்பு ஒப்பந்த அமலாக்கத்தை கண்காணிக்க தனி நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
🔹 ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம் இறுதி ஒப்பந்தம் கட்டாய அமலாக்கம் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தால் அங்கீகரிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளதாகவும், அதன்பின் இறுதி சமாதான ஒப்பந்தத்திற்கான 60 நாள் பேச்சுவார்த்தைக் காலம் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🌍🕊️





