‘2021 Mrs. Sri Lanka for Mrs. World’ அழகிப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் புஷ்பிகா டி சில்வாவின் கிரீடம் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 17ஆம் தேதி வழங்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம இன்று (22) அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில், முன்னாள் பட்டதாரியான கரோலின் ஜூரி மற்றும் மொடல் சூலா பாத்மேந்திரன் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு நெலும் பொக்குன அரங்கில் நடைபெற்ற போட்டியின் இறுதிநேரத்தில், புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மேடையில் ஏறிச் சென்று, அவரை தாக்கி, அணிவிக்கப்பட்டிருந்த கிரீடத்தை வலுக்கட்டாயமாக அகற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் அனைத்து சாட்சியங்களும் மற்றும் விசாரணை நடவடிக்கைகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக நீதவான் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பை 2026 அக்டோபர் 17ஆம் தேதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





