பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு தகுதி

உலகக்கிண்ணம் கால்பந்தாட்ட போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் முடிந்து, 16 அணிகளை தெரிவு செய்யும் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.

அதற்கமைய, அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பெரகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தன.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

இதனால், 2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

2-வது பாதியில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 70-வது நிமிடத்தில் கோல் போட்டார்.

இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது.

அதன்பின்பு கோல் அடிக்கப்படவில்லை. போட்டி முடிந்த பின்னர் மேலதிக நேரம் அளிக்கப்பட்டது. அப்போதும் கோல் விழவில்லை. இதனால், பிரான்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore