உலக எண்ணெய் சந்தை படிப்படியாக மீண்டு வருவதைத் தொடர்ந்து, OPEC+ கூட்டணியில் உள்ள ஏழு நாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி 188,000 பீப்பாய் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், கசகஸ்தான், அல்ஜீரியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் இந்த உற்பத்தி அதிகரிப்பில் பங்கேற்கின்றன.
2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உற்பத்திக் குறைப்பை படிப்படியாக நீக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இது தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மேற்கொள்ளப்படும் உற்பத்தி உயர்வாகும்.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்குப் பின்னர், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதால், உலக எண்ணெய் விலை மீண்டும் சீரடைந்து வருகிறது.
சந்தை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கவோ, நிறுத்தவோ அல்லது மீண்டும் குறைக்கவோ முழு நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவோம் என OPEC+ நாடுகள் தெரிவித்துள்ளன.





