1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையால் பறிமுதல்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின், 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ் போதைப்பொருள், 56 கிலோ 91 கிராம் ஹாஷிஷ் மற்றும் 667 கிலோ 695 கிராம் கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிற்கு பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்த முடிந்துள்ளதுடன், நாட்டிற்குள் ஆபத்தான போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கும் முடிந்துள்ளதாகக் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

நச்சுப் போதைப்பொருட்களற்ற பாதுகாப்பான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக கடல்சார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore