சம்மாந்துறையைச் சேர்ந்த U.L. அப்துல் பாசித் அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் நடத்தப்பட்ட Sworn Translator (Tamil / English) பரீட்சையில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, சத்தியப்பிரமாண தமிழ் / ஆங்கில மொழிபெயர்ப்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஜனவரி மாதம் நடைபெற்ற இப்பரீட்சையில் வெற்றிபெற்ற அவர், 2026 ஜூலை 20 ஆம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் கௌரவ பதில் நீதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இந்நியமனத்தின் மூலம், நீதிமன்றங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு சேவைகளை சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளராக வழங்கும் அதிகாரத்தை அவர் பெற்றுள்ளார்.





