முதல் அரையாண்டில் எரிபொருளுக்கான செலவினம் பாரியளவில் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் இறக்குமதிச் செலவுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என எழுப்பப்பட்ட வாய்மூலக் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இன்று (21) பாராளுமன்றில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்களே செலவிடப்பட்டிருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore