நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற இந்த விபத்தில் இரத்தினபுரியில் இருந்து சற்றுலா வாருகை தந்த 46 வயதுடைய டபிள்யூ.எம். ஜோதி திசநயனா என்ற நபர் மீது மோதியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பகுதியில் இருந்து
நுவரெலியாவிக்கு சுற்றுலா வருகை தந்த பேருந்தில் தடையாளி இயங்காமை காரணமாக குறித்த விபத்து ஏபட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நுவரெலியா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore