இலங்கையின் சுற்றுலாத்துறையில் முக்கிய மைல்கல்லாக, 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்று நேற்று (31) இலங்கையை வந்தடைந்துள்ளது.
✈️ கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கண்டிய நடன நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
🍃 மேலும், இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் உலகப் புகழ்பெற்ற தேயிலைத் துறையை வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு சிலோன் தேயிலை பொதிகளும் வழங்கப்பட்டன.
📌 இலங்கைக்கு ஒரே குழுவாக வருகை தந்துள்ள மிகப்பெரிய ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் குழு இதுவாகும்.





