போர் பதற்றத்தால் மீண்டும் உயரும் எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது.

அதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 0.86 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 96.86 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 0.85% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 94.61 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் விலை 1.66% அதிகரித்து,பீப்பாய் ஒன்றின் விலை 96.09 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.171 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

ஈரான் நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீண்டும் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore