குவைத் விமான நிலையத் தாக்குதல்: 3 இலங்கையர்கள் காயம் – இலங்கை கவலை வெளியீடு

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசித்து வரும் மற்றும் பணியாற்றி வரும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தின் முன்னேற்றங்களை இலங்கை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மீது ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் கவலையுடன் இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறு இலங்கை வலியுறுத்தியுள்ளதுடன், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சர்வதேச முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore