2026 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2026 மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டின் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





