நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறை அதிகாரிகளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கான சிகிச்சை மற்றும் தேவையான வசதிகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, 23 சிறை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சம்பவத்தில் காயமடைந்த 54 கைதிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் 19 கைதிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore