நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் அவசர ஒத்திவைப்பு விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 7 ஆம் திகதி சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், 2020 நவம்பர் 30 ஆம் திகதிய ஹன்சார்ட் அறிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கோள் காட்டியுள்ளதுடன், காவலில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 27 பேர் உயிரிழந்ததாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த துயரச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி, சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பு வழங்குமாறு கோரியுள்ளது.





