பஹாமஸில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்!

பஹாமாஸில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பத்து பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அரசாங்கம் ஃபிளமிங்கோ ஏர் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

குறித்த சம்பவமானது, தலைநகர் நஸ்ஸாவிற்கு மேற்கே உள்ள கடற்பகுதியில் அமைந்துள்ள வடக்கு ஆண்ட்ரோஸில் நிகழ்ந்தது.

பஹாமிய பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ், உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார். மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

“நானும் எனது மனைவியும் தாங்க முடியாத துயரத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறோம். உயிர் தப்பியவருக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறோம்” என்று டேவிஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரிக்கும் வரை, ஃபிளமிங்கோ ஏர் நிறுவனத்தின் விமான இயக்க சான்றிதழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே என்று எரிசக்தி, பயன்பாடுகள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore