ஜூலை மாதத்தில் இதுவரையில் 90,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.

வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 20,480 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23% ஆகும்.

அதேபோன்று, சீனாவிலிருந்து 5,494 பேரும், பிரித்தானியாவில் இருந்து 9,277 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 5,487 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,236,695 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவிலிருந்து 314,163 சுற்றுலாப் பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 117,844 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore