600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்காக 600 புதிய ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க முதலீட்டு திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு 49 முதல் 54 ஆசனங்கள் கொண்ட 600 ‘Standard’ ரக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், 2025–2026 வீதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்கு ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது உகந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டின் கீழ் ‘Standard’ ரக பேருந்துகளுக்கு பதிலாக, மிகவும் வசதியான 600 ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore