கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றில் முன்னிலை

தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் இந்த மனு விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நான்காவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்ட இந்த மனு தொடர்பான மேலதிக பரிசீலனை இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், ஷானி அபேசேகர பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டார் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எவ்வித சாட்சியங்களையும் மனுதாரர் முன்வைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore