இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் என்பது “பந்துவீச்சை விட துடுப்பாட்டமே முக்கியமான விளையாட்டு” என்ற தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
வருடாந்த இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையின் பலம் துடுப்பாட்டத்தில்தான் உள்ளது என தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டிற்கு வீரர்கள் மட்டுமே காரணமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீரர்கள், அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர், அணியின் தோல்விக்குப் பின்னால் பல்வேறு காரணிகள் இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன், வீரர்களை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்ற கருத்தையும் வெளிப்படுத்தினார்.





