குருவிட்ட சிறையின் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்

குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 4 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore