லக்கல பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட லக்கல புதிய நகர குடிநீர் வழங்கல் திட்டம் இன்று (12) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், குறித்த அமைச்சின் அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ளது.
👨👩👧👦 25,000க்கும் மேற்பட்டோருக்கு நன்மை
இந்தத் திட்டத்தின் மூலம் லக்கல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 21 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 6,500 குடும்பங்களைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீர் கிடைக்கவுள்ளது.
நீண்டகாலமாக பாதுகாப்பான குடிநீருக்காக எதிர்கொண்டிருந்த மக்களின் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்வதுடன், பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களுக்கு தொடர்ச்சியான மற்றும் நம்பகமான குடிநீர் வசதியை உறுதி செய்வதன் மூலம், லக்கல பிரதேசத்தின் அடிப்படை வசதிகளில் இந்தத் திட்டம் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





