ஜப்பானில் இலங்கை இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore