டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு கூடிய தமது சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, நாளை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore