ஈரான், அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 7வது இரவும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஈரானின் கண்காணிப்பு நிலையங்கள், இராணுவ தளவாட வசதிகள், நிலத்தடி ஆயுத களஞ்சியங்கள் மற்றும் கடல் திறன்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக ஈரான், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ வளங்களை தாக்கியதாக கூறியுள்ளது.
ஈரானில் அமெரிக்க தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் லார், ஜாஸ்க், சிரிக், புஷெஹர், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, அஹ்வாஸ் மற்றும் யாஸ்ட் ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட எண்ணெய் கப்பல்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்க மத்திய கட்டளை மறுத்துள்ளது.
(Newswire)





