நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முற்பட்ட 2 சிறுவர்கள் பலி

தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது.

அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore