இலங்கை தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், பின்னர் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா, தனது 93ஆவது வயதில் காலமானார்.
அவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தந்தையுமாவார்.
பொது நிர்வாகத் துறையில் நீண்டகாலம் பணியாற்றிய ஹாரிஸ் டி சில்வா, இலங்கையின் அரச ஆவணங்களை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் நவீனமயமாக்கலில் முக்கிய பங்காற்றியவராகப் பரவலாக மதிக்கப்பட்டார். நாட்டின் ஆவணக் காப்பக அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
அவரது பூதவுடல் இன்று (05) காலை 9.00 மணி முதல் கிருலப்பனை, பூர்வாராம வீதியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் கிருலப்பனை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





