எமது எதிர்கால சந்ததியினரிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 03.08.2026 அன்று KM/ST/Al-Marjan MLC பாடசாலையின் 10 ஆம் வகுப்பு (Grade 10) மாணவர்களுக்கான சிறப்பு சுகாதாரக் கல்வி அமர்வு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது!

இவ்விழிப்புணர்வு வகுப்பில் 30 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள், அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்துத் தெளிவுபெற்றனர்.

சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாகப் பேணுவதன் மூலமும், நீர்தேங்குவதைத் தவிர்ப்பதன் மூலமும் டெங்கு நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற முக்கியச் செய்தி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
ஆரோக்கியமான மற்றும் டெங்கு அற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவோம்!





