மெகசின் சிறைச்சாலைக்குள் அமைதியின்மை

பொறளை மகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore