நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தினரின் இலங்கைத் தொடர்பு மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது உறவு குறித்து அண்மைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
தனது தாயார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்கு பிறந்து வளர்ந்த பின்னர் குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறியதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில், தனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்து ஒன்று தங்களது குடும்பத்தின் கடந்த காலத்துடன் தன்னை இணைக்கும் முக்கியமான தொடர்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் பணியாற்றி வரும் “Sigma” திரைப்படத் திட்டத்திற்கான படப்பிடிப்பு இடமாக இலங்கையையும் பரிசீலித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக திரைப்படக் குழுவினர் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்திருந்ததாகவும், எனினும் அந்தத் திட்டம் இறுதியில் நடைமுறைக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதுடன், நாட்டின் இயற்கை அழகை தனது திரைப்படத்தின் மூலம் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.





