காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நீர்மட்ட உச்சத்தை எட்டின – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காசல்ரீ (Castlereigh) மற்றும் மவுசாகலை (Maussakele) நீர்த்தேக்கங்கள் இன்று காலை உபரி நீர்மட்டத்தை எட்டியுள்ளன.

பொறியியலாளர்களின் தகவலின்படி, காசல்ரீ நீர்த்தேக்கம் உபரி நீர்மட்டத்தை விட 1.2 அடி உயர்ந்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அப்பகுதியில் 25 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உபரி நீர்மட்டத்தை விட 3.4 அடி உயர்ந்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 29 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், Canyon, Laxapana, New Laxapana, Polpitiya மற்றும் Wimalasurendra ஆகிய நீர்த்தேக்கங்களுடன் தொடர்புடைய மின்சார உற்பத்தி நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவில் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மஸ்கெலியா ஓயா நீர்த்தேக்கத்தின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய நிலை ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore