இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நிரோஷன் டிக்வெல்லா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
காயமடைந்த குசல் மெண்டிஸுக்குப் பதிலாக டிக்வெல்லா விக்கெட் காப்பாளராக செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா–இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதனுடன் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் மீண்டும் அணிக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டிகள் மற்றும் அண்மைய பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட கேஷர நுவன்த தனது முதல் டெஸ்ட் அழைப்பைப் பெறும் வாய்ப்பில் உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும் உடற்தகுதிக்கு உட்பட்டு அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிக்கட்டு அறுவை சிகிச்சையிலிருந்து பதும் நிஸ்ஸங்க குணமடைந்து வரும் நிலையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது. இதன்படி நிஷான் மதுஷ்க மற்றும் லஹிரு உதார ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் இலங்கை டெஸ்ட் அணி:
நிஷான் மதுஷ்க, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), பசிந்து சூரியபண்டார, சோனால் தினுஷ, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் காப்பாளர்), மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், கேஷர நுவன்த.
எனினும், இந்த அணி பட்டியல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா–இலங்கை முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.





