மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான இலங்கையின் முதலாவது ஐ.நா. மீளாய்வு இன்று

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (CRPD) கீழ் இலங்கையின் முதலாவது மீளாய்வு இன்று (14) ஜெனீவாவில் நடைபெறுகிறது.

ஐ.நா. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான குழுவின் 35ஆவது அமர்வின் கீழ் நடைபெறும் இந்த மீளாய்வு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வடிவில் இடம்பெறவுள்ளது.

இலங்கை குழுவுக்கு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமை தாங்குகிறார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

இலங்கை 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையை (CRPD) அங்கீகரித்திருந்ததுடன், 2019 ஒக்டோபரில் தனது ஆரம்ப அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

2025 டிசம்பரில், ஐ.நா. குழுவினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும் இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பில் இலங்கை இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் இந்த மீளாய்வு வாய்ப்பாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. குழுவின் 35ஆவது அமர்வு 2026 ஆகஸ்ட் 12 முதல் 27ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore