3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுவரை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிருடன் இருக்கும் குழந்தைகளைக் கொண்ட அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் முழு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதிய முடிவின் மூலம் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. 2011ஆம் ஆண்டு 90 நாட்களிலிருந்து 6 மாதங்களாகவும், 2016ஆம் ஆண்டு 9 மாதங்களாகவும், 2021ஆம் ஆண்டு 365 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

(Newswire)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore