ஆசிரியர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

2026 ஆம் ஆண்டுக்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

📅 விண்ணப்ப காலம்: 2026 ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 14 வரை
📝 பரீட்சை: 2026 டிசம்பர் மாதம்
💻 விண்ணப்ப முறை: இணையவழி

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்கள், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

Grade 2-I ஆக தரம் உயர்த்தப்பட்ட ஆசிரியர்கள், உரிய காலத்திற்குள் III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

மேலும், பரீட்சைக்கான Self-study modules பாடத்திட்டம் கல்வி அமைச்சின் e-Thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பரீட்சார்த்திகள் அதனைப் பயன்படுத்தி தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore