இலங்கை பொலிஸ் சேவை தனது 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
2026 செப்டம்பர் 3ஆம் திகதி பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், பிரதான நிகழ்வு பொலிஸ் Field Force தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, பொதுமக்களுக்கு பொலிஸ் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் தொலைக்காட்சி, இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
👮 பொதுமக்களுக்கான கண்காட்சி
செப்டம்பர் 4 முதல் 6ஆம் திகதி வரை, பொலிஸ் Field Force தலைமையகத்தில் காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை விசேட கண்காட்சி நடைபெறவுள்ளது.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் பொலிஸ் சேவைகள் குறித்து விளக்கும் பல்வேறு தகவல் அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில்:
🔹 பொலிஸ் ஊடக மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள்
🔹 மோட்டார் சைக்கிள் காட்சிகள்
🔹 பரசூட் சாகசக் காட்சிகள்
🔹 குதிரைப் படை காட்சிகள்
🔹 பொலிஸ் நாய் பிரிவு காட்சிகள்
உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
மேலும், செப்டம்பர் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளினால் பொதுமக்களுடன் நெருக்கமான உறவை உருவாக்கும் வகையில் பல்வேறு சமூகநல மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
📌 160 ஆண்டுகால பொலிஸ் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.





