நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியிருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேபாள இராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின்படி, மீட்பு நடவடிக்கைகளின் போது 118 நேபாள பிரஜைகளுடன் பிரித்தானிய ஆண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பிரித்தானியரின் அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளதுடன், 3,900க்கும் அதிகமானோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திரிசூலி ஆற்றை அண்மித்த நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேறும் சகதியும் நிறைந்த சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் நேபாள மற்றும் சீன இராணுவத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் தொடரும் நிலையில், காணாமல் போனவர்களை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.





