நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் நிலைய சுரங்கப் பகுதியில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
திரிஷூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையின்போது சஞ்சய ஷா மற்றும் கபீர் மகர்ஜன் ஆகிய இருவர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🔹 மீட்கப்பட்ட சஞ்சய ஷா, நேபாள மின்சார சபையில் இயந்திரப் பிரிவு மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹 அவருக்கு உடனடியாக ஒக்சிஜன் வழங்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
🔹 இரண்டாவது நபரான கபீர் மகர்ஜன் மீட்கப்பட்டபோது புன்னகையுடன் நன்றி தெரிவித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், அந்தப் பகுதியில் உள்ள பல நீர்மின் சுரங்கங்களில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
🌊 பாரிய வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், இந்த இருவரின் உயிருடன் மீட்பு மற்றவர்களையும் மீட்க முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.






